2017-10-12 16:21:00

வேலை தேடுவோரை ஆசீர்வதிக்கும் அப்பரெசிதா அன்னை மரியா


அக்.12,2017. பிரேசில் நாட்டின் அப்பரெசிதா அன்னை மரியாவின் திருவிழா இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அவ்வன்னையின் பெயரில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'ஏழைத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட அப்பரெசிதா அன்னை மரியா, இன்று அனைவரையும், குறிப்பாக, வேலைதேடி அலையும் அனைவரையும் ஆசீர்வதிக்கின்றார்' என எழுதியுள்ளார் திருத்தந்தை.

இவ்வன்னையின் திருவிழாவையொட்டி பிரேசில் நாட்டு மக்களுக்கு சிறப்பு காணொளிச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.