2017-08-24 15:06:00

"மனிதகுலம் வாழ்வதற்கு நம்பிக்கை தேவை" திருத்தந்தையின் செய்தி


ஆக.24,2017. "மனிதகுலம் வாழ்வதற்கு நம்பிக்கை தேவை, அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கு, தூய ஆவியார் தேவை" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று வெளியாயின.

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில் ஒன்பது மொழிகளில் வெளியிடப்படும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், ஆகஸ்ட் 24ம் தேதி வரை, 1277 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் செய்திகள் வெளியாகும் வலைத்தளத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள @pontifex என்ற பெயர், இலத்தீன் மொழியில், 'திருத்தந்தை' என்பதைக் குறிப்பதோடு, இச்சொல்லுக்கு, 'பாலம்' என்பதும் பொருளாக விளங்குவதால், இந்த வலைத்தளம், திருத்தந்தைக்கும், மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைகளின் உலகச் சங்கத்தின் பொதுச் செயலரான முனைவர் Olav Fykse அவர்களையும், அர்ஜென்டீனா திருப்பீடத் தூதர், பேராயர் Emil Paul Tscherrig அவர்களையும், இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.