ஆக.,15,2017. அன்னை மரியாவின் விண்ணேற்பு திருவிழா இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அப்பெருவிழாவை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'நம் வருங்காலத்திற்கான வாழ்த்துக்களை, அன்னை மரியாவின் விண்ணேற்பு நமக்கு வழங்குகிறது, இயேசு கிறிஸ்துவின் வெற்றியோடு புதிய வானம் மற்றும் புதிய பூமியைக் குறித்து அறிவித்துக்கொண்டே, வானகம் நோக்கி நம் பார்வையை, இவ்விழா திருப்புகிறது' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு, இச்செவ்வாய்க்கிழமை, நண்பகல் மூவேளை செப உரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |