2017-08-14 16:38:00

ஒவ்வொரு நாளும் இறைவனிடம் நம்மை ஒப்படைப்போம்


ஆக.,14,2017. இறைவனின் பொறுப்பில் நம்மை நம்பிக்கையுடன் கையளிப்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகிறது எனற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட புனித மாக்சிமிலியானோ கோல்பே அவர்களின் திருவிழாவையொட்டி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  'இறைவன் மீதான நம்பிக்கையுடன் நம்மை அவரிடம் ஒப்படைக்கும் நம் பயணம், தினமும் துவங்குகிறது, அதுவும் ஒவ்வொரு நாள் காலையிலும் துவங்குகிறது' என எழுதியுள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, 'பலவீனமானவர்களின் நற்பண்பாக அல்ல, மாறாக, தான் பெரியவன் என்பதை காட்டடுவதற்காக, மற்றவர்களை கீழ்த்தரமாக நடத்தாத, பலசாலிகளின் நற்பண்பாக, தாழ்ச்சியை, அன்னைமரியில் காண்கிறோம்' என உரைக்கிறது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.