2017-07-25 16:03:00

பானமாவில், கியூப புலம்பெயர்ந்த மக்களுக்குத் தீர்வு காண.....


ஜூலை,25,2017. பானமா நாட்டில், பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கியூபா நாட்டு புலம்பெயர்ந்த மக்கள் குறித்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு, பானமா கர்தினால் ஹோசே லூயிஸ் லக்குன்சா அவர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்.

பானமா நாட்டு தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய, கர்தினால் லக்குன்சா அவர்கள், பானமாவின் Los Planes de Gualaca புலம்பெயர்ந்தவர் முகாமில் வைக்கப்பட்டுள்ள, புலம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இம்மக்கள் குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் இடைப்பட்ட நாள்களில், இவர்கள் வேலைசெய்வதற்கு, தற்காலிக அனுமதி வழங்கப்படலாம் என, பானமா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார், கர்தினால் லூயிஸ் லக்குன்சா.

பானமாவில், சட்டத்துக்குப் புறம்பே நுழைந்த ஏறக்குறைய நூறு கியூபா நாட்டினர், Los Planes de Gualaca முகாமில், மூன்று மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.