2017-07-14 16:21:00

பாசமுள்ள பார்வையில்...: குடும்பத்தின் இணைப்புப் பாலம், தாய்


விடுமுறைக்குப்பின் அன்றுதான் பள்ளி திறந்திருந்தது. 3ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும், வகுப்பு ஆசிரியருக்காகக் காத்திருந்தார்கள். எப்படியும் இன்று வகுப்பு நடத்தப்போவதில்லை, விடுமுறையை எப்படிச் செலவிட்டீர்கள் என்பது பற்றித்தான் கேட்கப் போகிறார்கள் என அந்த சிறுவர்களும் சிறுமிகளும் காத்திருந்தபோது, அறைக்குள் நுழைந்த ஆசிரியை விமலா, அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு, உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒருபக்க கட்டுரை எழுதுங்கள் எனக் கேட்டது, வித்தியாசமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எழுதியபோது, ஒவ்வொரு உறுப்பினர்களுடனும், ஏதாவது ஒரு வகையில், அவர்கள் தாய் தொடர்புப்படுத்தப் பட்டிருந்தார். 'அப்பா எங்களை வெளியேக் கூட்டிகொண்டு போவார்' என அப்பா பெருமையைச் சொல்லிவிட்டு, 'வெளியிலிருந்து திரும்பும்போது, அம்மா சாதம் செய்து தயாராக இருப்பார்கள்' என்றும், 'என் தம்பி ரொம்ப சுட்டி, எப்போதும் அம்மா மடியில்தான் படுத்து தூங்குவான்' என்றும், 'எங்க அண்ணன் அம்மா செல்லம்' என்றும் ஒவ்வொன்றிலும் தாயை தொடர்பு படுத்தியே குழந்தைகள் எழுதியதைப் பார்த்தபோது, ஆயாவின் கண்காணிப்பில் விட்டுவந்த, தன் 2 வயது இரட்டைக் குழந்தைகளின் நினைவு வந்து, கண்கள் பனித்தன, ஆசிரியை விமலாவுக்கு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.