2017-06-26 17:08:00

இறைவனின் கண்களில் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்றவர்


ஜூன்,26,2017. உலகில் இடம்பெறும் சித்ரவதைகளுக்கு எதிராக தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டு இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'சித்ரவதைகளுக்கு எதிரான என் வன்மையான கண்டனத்தை மீண்டும் ஒருமுறை வெளியிடுவதோடு, இத்தகைய நிலைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவும், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், அனைவரையும் விண்ணப்பிக்கிறேன்' என தன் டுவிட்டர் செய்தியில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'இறைவனின் கண்களில் நாம் ஒவ்வொருவரும் விலைமதிப்பற்றவர், ஈடு இணையற்றவர்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் சகோதர சகோதரிகளின் தேவைகளில் நாம் பங்குபெறவும், பகிரவும் நம் உணர்வுகள் துண்டப்படுமாறு நம் இதயங்களை கதகதப்பாக்குகிறது இரக்கம்' என தன் சனிக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.