2017-06-22 16:11:00

இவ்வுலகின் பொய்ஞானத்தால் பாதை மாறாமல் இருப்போம்


ஜூன்,22,2017.  'இவ்வுலகின் பொய்ஞானத்தால் பாதை மாறாமல் இருப்போமாக. மாறாக, நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் உண்மை வழிகாட்டியாம் இயேசுவை பின்தொடர்வோமாக' என இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில் இந்தியாவின் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்ஃபோர் டோப்போ அவர்களையும் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Puerto Rico நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலர் ஆகிய மூவரையும் சந்தித்து உரையாடினார்.

அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் இயக்கத்தின் பொதுச்செயலர் மைக்கல் ராய் அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.