2017-06-20 15:40:00

கர்தினால் தாக்லேக்கு பிறந்தநாள் பரிசாக இரத்த தானம்


ஜூன்,20,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் பரிசாக, அவ்வுயர் மறைமாவட்ட அருள்பணியாளர் மற்றும், பணியாளர்கள், இரத்த தானம் அளித்துள்ளனர்.

ஜூன் 21, இப்புதனன்று, தனது அறுபதாவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் கர்தினால் தாக்லே அவர்களுக்கு, பொருள்களைப் பரிசுகளாக வழங்காமல், இத்திங்களன்று இரத்த தானம் வழங்கப்பட்டுள்ளது.

கர்தினால் தாக்லே அவர்களின் அறுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு, மனிலா உயர்மறைமாவட்டம், வாழ்வின் அடையாளமான, இரத்த தான நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது.

இது குறித்து UCA செய்தியிடம் தெரிவித்த, மனிலா உயர்மறைமாவட்ட மனிதவள முன்னேற்றத் துறை இயக்குனர் அருள்பணி, Sanny de Claro அவர்கள், வாழ்வின் அடையாளமாக, கர்தினாலுக்கு, இரத்த தானத்தைப் பரிசாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.