2017-06-19 15:18:00

பாசமுள்ள பார்வையில்..கடும்துயரிலும் கடவுளை நினைவூட்டும் தாய்


யூதமத ரபி ஒருவர், தனது இரண்டு மகன்களிடம் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் மாலையில், வேலை முடிந்து வீடு திரும்பும்போது, வழியில் சந்திக்கும் மக்கள் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடுவார். அதன் பின்னே வீடு வருவார். வீட்டில் தன் மகன்களிடம் சிறிது நேரம் விளையாடிய பின்னே உணவருந்துவார். அன்று மாலை அவர் வீடு திரும்பியதும், தன் செல்லங்களை அழைத்தார். பதில் இல்லை. மீண்டும் மீண்டும் அழைத்தார். பதிலே இல்லை. அன்று வழக்கத்துக்கு மாறாக, வீடு அமைதியாக இருந்தது. ஆத்திரமடைந்தார். அவர் மனைவி, அவரிடம், ஏங்க.. யாராவது என் பொறுப்பில் இரண்டு விலையுயர்ந்த முத்துக்களை ஒப்படைத்துச் சென்று, பல ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் வந்து அவற்றைக் கேட்டால், நான் மறுப்பது சரியா? எனக் கேட்டார். பின், அவரை மெதுவாக, வீட்டிலுள்ள கீழ் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரண்டு மகன்களின் உடல்களும், ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தன. பகலில் அவர்கள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், ஒரு வாகனம் அவர்கள் மீது ஏறி, அந்த இடத்திலேயே அவர்களைக் கொன்றுவிட்டது. ரபி, கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். அவரைத் தேற்றிய அவர் மனைவி, பிறர்க்கு உரிய உடைமைகளைக் காலம் தாழ்த்தாது உடனே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று, சிறிது நேரத்திற்கு முன்பு, நீங்கள்தானே கூறினீர்கள். நமது பிள்ளைகள் இருவரும் இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற இரு முத்துக்கள். அவர் கொடுத்தார், அவரே எடுத்துக்கொண்டார். அவர் நாமம் புகழப்படுவதாக என்றார்.

ஆம். கடும் வேதனையிலும் கடவுளை நினைவூட்டுபவர் தாய்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.