2017-06-03 13:48:00

பாசமுள்ள பார்வையில்: இதயத்திலிருந்து பிறந்த மகள்


ஆறு வயது சிறுமி சில்வியாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. "நான் ஏன் உங்கள் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை?" என்று சில்வியா தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுடைய அம்மா, எலிசாவுக்கு, 3 ஆண் குழந்தைகள் பிறந்தபின்னர், அவரது கருப்பையில் உருவான ஒரு பிரச்சனையால், அதை நீக்க வேண்டியிருந்தது. பெண் குழந்தை வேண்டும் என்பது, எலிசாவின் பெரும் கனவாக இருந்தது. எனவே, எலிசாவும், அவரது கணவரும், சில்வியாவைத் தத்தெடுத்து வளர்த்தனர். சில்வியாவின் 6வது பிறந்தநாளன்று, அவளிடம் உண்மையைக் கூற முடிவெடுத்தனர். அம்மா சொன்னதைக் கேட்ட சில்வியா, "நானும் ஏன், என் அண்ணன்களைப் போல், உங்கள் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை?" என்று அழுதபடியே கேட்டாள். தன் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, "உன்னை என் வயிற்றில் சுமக்க முடியாது என்று டாக்டர் சொன்னதால், உன்னை என் இதயத்தில் சுமக்க முடிவு செய்தேன். நீ, என் இதயத்திலிருந்து பிறந்தவள்" என்று எலிசா கூறியதும், சில்வியா, புன்னகையுடன், தன் தாயை அணைத்துக்கொண்டாள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.