2017-06-01 16:28:00

தீவிரவாத இருள், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ளது


ஜூன்,01,2017. தீவிரவாதம், வெறுப்பு, பகைமை, முற்சார்பு எண்ணங்கள் ஆகிய இருள், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ளது என்று, அந்நாட்டு கர்தினால் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் கொட்டப்பாட்டோ (Cotabato) உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Orlando Quevedo அவர்கள், மிந்தனாவோ பகுதியில் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் பிரித்து, பகைமையை வளர்ந்துவரும் தீவிரவாதிகளின் முயற்சிகளைக் கண்டனம் செய்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக மராவி நகரில் நிலவிவரும் மோதல்களில், இதுவரை, 65 போராளிகள், 20 இராணுவ வீரர்கள், 19 பொதுமக்கள் என 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிலிப்பீன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாட்டில் நிலவி வரும் மோதல்களின் எதிரொலியாக, இந்தோனேசியாவில் வாழும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய வெறுப்புக்கு தாங்கள் உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்வதாக UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.