மே,24,2017. மே 25, இவ்வியாழனன்று, அர்ஜென்டீனா நாடு, தன் தேசிய நாளைக் கொண்டாடுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அரசுத்தலைவர், மவுரிசியோ மாக்ரி (Mauricio Macri) அவர்களுக்கு, வாழ்த்து தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
தன் அன்பார்ந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும், உலக செல்வங்களையும், ஆன்மீக வளங்களையும், பெற்றுவாழ தான் வாழ்த்துவதாக, தன் தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை.
மேலும், அமைதி, ஒருவர் மீது ஒருவர் காட்டும் மரியாதை, என்ற வழிகளில் நாடு முன்னேற்றம் காணவேண்டும் என்பதையும் தன் வாழ்த்தாகக் கூறியுள்ளார், திருத்தந்தை.
இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற, 1810ம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி, புவனஸ் அயிரஸ் நகரில் துவக்கப்பட்ட ஒரு புரட்சி, அந்நாட்டு விடுதலையில் நிறைவுற்றதால், மே 25ம் தேதி, அந்நாட்டில், புரட்சியின் நாளென்றும், தேசிய நாளென்றும் சிறப்பிக்கப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |