2017-04-27 15:51:00

Montreal பசிலிக்கா - 750ம் ஆண்டுக்கு திருத்தந்தை வாழ்த்து


ஏப்.27,2017. "அமைதியின் திருப்பயணியாக எகிப்து நாட்டுக்குச் செல்லும் எனக்காக தயவுசெய்து செபியுங்கள்" என்ற வேண்டுகோளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், இவ்வியாழனன்று வெளியிட்டார்.

'அமைதியின் எகிப்தில், அமைதியின் திருத்தந்தை' என்ற விருது வாக்குடன், ஏப்ரல் 28, 29 ஆகிய இருநாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 18வது திருத்தூதுப்பயணத்தை இவ்வெள்ளி காலை மேற்கொள்கிறார்.

மேலும், கனடா நாட்டின் Montreal நகரில் உள்ள பசிலிக்கா அர்ச்சிக்கப்பட்டதன் 750ம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 26ம் தேதி, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட இந்த விழாவில், திருத்தந்தையின் சார்பாக பங்கேற்ற, கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கொ அவர்கள், மாலை 6 மணிக்கு ஆற்றிய திருப்பலியின்போது, திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.

Montreal பேராயர், Michele Pennisi அவர்களுக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

2ம் வில்லியம் என்ற மன்னரால், அன்னை மரியாவின் பெயரால் எழுப்பப்பட்ட ஆலயம், 1267ம் ஆண்டு, ஏப்ரல் 25ம் தேதி, கர்தினால் Rodolfo of Chevrieres அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.