2017-03-28 15:33:00

தவக்காலச் சிந்தனை: விருப்பத்தோடு செய்வோம்


தன் வார்த்தைகளைக் கேட்டு, அதனைக் கடைபிடிப்பவர்கள், மனநிறைவையும், நிலைவாழ்வையும் அடைவர் என்கிறார் இயேசு. அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு, இறைபக்தி இவைபோன்ற நல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சிக்கும்பொழுது, சில வேளைகளில், அது மிகவும் கடினமாகத் தோன்றுகின்றது. நாம் எந்த ஒரு செயலையும் கட்டாயத்தின்பேரில் செய்வோமெனில், அது நமக்கு பெரும் சுமையாகத்தான் இருக்கும். அதன் மேல் வெறுப்பும் தோன்றும். ஆனால், அச்செயலை விருப்பத்தோடு செய்தோமென்றால், அது மிக எளிதாகவும், நமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கும். அச்செயலை, திரும்பத் திரும்பச் செய்யத்தூண்டும்.

நாம் பின்பற்றும் நல்ல மதிப்பீடுகளை, கட்டாயத்தினால் செய்கின்றோமா? அல்லது விரும்பி செய்கின்றோமா? என சிந்தித்துப் பார்ப்போம். இந்த தவக்காலத்திலே, கட்டாயத்தின் பேரில், ஒரு செயலைச் செய்து, மனசோர்வு அடைவதை விட்டுவிட்டு, விருப்பத்தோடு செய்து, மனநிறைவை அடைய முற்படுவோம். நமது வாழ்வுப் பயணம் நிறைவாக அமையட்டும்.

-அருள்சகோதரர் செலூக்காஸ் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.