2017-03-15 15:29:00

நலிவுற்றோர் சார்பில் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்


மார்ச்,15,2017. "வாழ்வை, சிறப்பாக, அது, மிகவும் நலிவடைந்து, காயமுற்றுள்ள நிலையில் இருக்கும்போது, வரவேற்று, அன்பு செய்வதற்கு, இறைவார்த்தை நமக்கு உதவி செய்கிறது" என்ற கருத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, மார்ச் 15, இப்புதனன்று வெளியானது.

“நலிந்தவர்கள் மற்றும், ஏழைகளுக்கு நம் கதவுகளைத் திறந்துவிடும் மனநிலையைப் பெறும்பொருட்டு, ஒருவர் ஒருவருக்காக நாம் செபிப்போம்” என்ற டுவிட்டர் செய்தி வழியே இச்செவ்வாயன்று, நலிந்தவர் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியத் திருத்தந்தை, இன்று மீண்டும் வாழ்வு நலிந்துள்ள நிலை குறித்து நம் கவனத்தை ஈர்த்துள்ளார்.

@pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் 8 மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டு வரும் செய்திகளின் எண்ணிக்கை, மார்ச் 15, இப்புதனன்று 1,131 ஆக உள்ளது என்பதும், அவரது செய்திகளைத் தொடர்வோர், 10,496,243 என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.