2017-03-13 15:57:00

மனமாற்றம் எனும் பயணத்தில் தூய ஆவியாரின் துணை


மார்ச்,13,2017. 'இறை வார்த்தை எனும் கொடையை மீண்டும் கண்டுகொள்ள உதவும் நோக்கில்,  மனமாற்றம் எனும் உண்மையான பயணத்தில் தூய ஆவியார் நம்மை வழி நடத்திச் செல்வாராக'  என்ற வார்த்தைகளை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று, அதாவது, மார்ச் மாதம் 13ம் தேதியன்று, திருத்தந்தை, திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவுற்றதையொட்டி, வத்திக்கான் நாட்டிற்கு விடுமுறை என்பதால், சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுமக்களுடன் நிறைவேற்றும் காலைத் திருப்பலி இடம்பெறவில்லை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.