2017-03-06 15:46:00

மியான்மார் கல்வி அமைப்பை மேம்படுத்தும் தென்கொரிய திருஅவை


மார்ச்,06,2017. மியான்மார் நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்தும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது, தென்கொரிய தலத்திருஅவை.

தென் கொரியாவின் செயோல் உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ' ஒரே உடல், ஒரே ஆவி' என்ற அரசு சாரா இயக்கத்தின் வழியாக, மியான்மார் ஆசிரியர்களுக்கு அந்நாட்டில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

மியான்மாரின் ஏறத்தாழ 70 ஆண்டு கால உள்நாட்டு மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், இதுவரை, 66,000 டாலர்களைத் திரட்டியுள்ளது, செயோல் உயர்மறைமாவட்டம்.

மியான்மார் நாட்டின் ஆசிரியர்களுக்கு, சிறந்த பயிற்சியை வழங்கி, அதன் வழியாக அந்நாட்டின் கல்வித்துறைக்கு உதவுவதை தன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது, செயோல் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் 'ஒரே உடல், ஒரே ஆவி' இயக்கம்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.