2017-03-06 15:53:00

நாம் திருந்தி வரும்வரை காத்திருக்கும் நண்பர் அவர்


மார்ச்,06,2017. 'நம்மை எச்சூழலிலும் கைவிடாத நம்பிக்கைக்குரிய நண்பர் இயேசு. நாம் பாவம் செய்தாலும், நாம் மனந்திருந்தி திரும்பிவரும்வரை நமக்காக பொறுமையுடன் காத்திருப்பவர் அவர்' என தன் டுவிட்டர் பக்கத்தில், ஞாயிறன்று காலையில் பதிவிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்கு முன்னர் இப்பதிவை வெளியிட்டுள்ள திருத்தந்தை, மூவேளை செப உரையை வழங்கிய பின்னர், மாலையில், தன் தியானத்தை முன்னிட்டு அரிச்சா நகருக்கு கிளம்புமுன்னரும், ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மாலை 4 மணிக்கு கிளம்புவதற்கு முன்னர், உள்ளூர் நேரம் 3.30 மணிக்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, அவரின் தியானத்திற்கு செபங்கள் வழியாக உதவுமாறு அழைப்பு விடுக்கிறது.

'வரும் வெள்ளிக்கிழமை வரை ஆண்டு தியானத்தில் ஈடுபட உள்ள எனக்காகவும், என் உடன் உழைப்பாளர்களுக்காகவும் செபிக்குமாறு வேண்டுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.