2017-02-18 14:21:00

பாசமுள்ள பார்வையில்: மன்னிப்பினால் மட்டுமே நம்பிக்கை வளரும்


இவ்வுலகை, ஒரு கல்லறைக்காடாக மாற்றிவரும் பழிக்குப் பழி என்ற உலக மந்திரத்திற்கு எதிரான ஒரு நிகழ்வு, இந்தியாவில் நடந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஒடிஸ்ஸா மாநிலத்தில் பழங்குடியினரிடையே, குறிப்பாக, தொழுநோயாளர்கள் மத்தியில் உழைத்து வந்தவர், Graham Staines என்ற கிறிஸ்தவப் போதகர். அவரையும், Philip, Timothy என்ற, அவரது இரு மகன்களையும் 1999ம் ஆண்டு சனவரி மாதம் உயிரோடு எரித்துக்கொன்ற தாரா சிங்கிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை இரத்து செய்யுமாறு, கொல்லப்பட்ட போதகரின் மனைவி, Gladys Staines அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், ஒடிஸ்ஸா மாநில முதல்வருக்கும் விண்ணப்ப மடல் அனுப்பி, மரணதண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றச் செய்தார். “மன்னிப்பினால் மட்டுமே நம்பிக்கை வளரும்” என்புது, Gladys அவர்களின் நம்பிக்கை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.