2017-02-13 16:25:00

திருத்தந்தை : இறைவனுக்கு கட்டுப்பாடுகளை விதிக்காதிருப்போம்


பிப்.,13,2017. 'இறைவனுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காதிருப்போம். நம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைப்பது என்பது, அவரிடம் எவ்வித முன்நிபந்தனைகளும் வைக்காமல், அவரின் திட்டத்துக்குள் நுழைவதாகும்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், குழந்தைகளின் மாண்பு மதிக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'குழந்தைகளின் மாண்பு மதிக்கப்பட வேண்டும். சிறார் படைவீரர்கள் என்ற அவமானம், உலகம் முழுவதிலுமிருந்து துடைத்தெறியப்படவேண்டும் என செபிப்போம்' என தன் டுவிட்டரில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 5 ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த கோஸ்டா ரிக்கா நாட்டு ஆயர்களை, இத்திங்களன்று காலையில், திருப்பீடத்தில் சந்தித்து, கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.