2017-02-10 15:59:00

கென்ய ஆயர்கள் : வறட்சியை, தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்


பிப்.10,2017. ஆப்ரிக்க நாடாகிய கென்யாவில் நிலவும் கடும் வறட்சியை, தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு, அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஆயர்களின் இந்த வேண்டுகோள் குறித்து, செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, கென்ய ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Philip Anyolo அவர்கள் தலைமையிலான குழு, கடும் வறட்சியினால் துன்புறும் கென்ய மக்களுக்கு, பன்னாட்டு உதவிகள் கிடைக்கும் நோக்கத்தில், நாட்டின் தற்போதைய நிலைமையை, தேசியப் பேரிடராக உடனடியாக அறிவிக்குமாறு, அரசை வலியுறுத்துவதாகத் தெரிவித்தது.

கென்ய அரசு, கென்ய செஞ்சிலுவை சங்கம், மற்றும் ஏனைய பிறரன்பு நிறுவனங்கள் உதவி வந்தாலும், அவை மக்களின் பசிக்கொடுமையைப் போக்குவதற்குப் போதுமானதாக இல்லை எனவும், அக்குழு கூறியது.

கென்யாவில், 24 இலட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுகின்றது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.