2017-02-08 16:41:00

திருத்தந்தையின் கண்காணிப்பில், புலம்பெயர்ந்தோர் பிரிவு


பிப்.08,2017. இவ்வாண்டு சனவரி 1ம் தேதி முதல், வத்திக்கானில் தன் பணிகளைத் துவங்கியுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருக்கென தனிப்பட்ட ஒரு பிரிவைத் துவக்கியுள்ளது.   

திருத்தந்தையின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் இப்பிரிவு, @M_RSection என்ற பெயரில், சமூக வலைத்தளங்களில் செய்திகளையும், டுவிட்டர் செய்திகளையும் பகிர்ந்து வருகிறது.

கடந்த மாதம் 15ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட 103வது உலக புலம்பெயர்ந்தவர் நாளையொட்டி, துவக்கப்பட்ட இந்த முயற்சிக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12ம் தேதி முதல், 15ம் தேதி முடிய டுவிட்டர் செய்திகளைப் பகிர்ந்து வந்தார்.

அதே வண்ணம், மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள், பிப்ரவரி 8ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை தன் டுவிட்டர் செய்திகளை, பிப்ரவரி 6, 7, மற்றும் 8 ஆகிய நாட்கள், @M_RSection என்ற முகவரியில் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.