2017-01-30 16:21:00

செபத்தால் இயலாதது ஏதுமில்லை, அமைதியை கட்டியெழுப்புவோம்


சன.,30,2017. 'செபத்தில் நாம் கடவுளை நோக்கி திரும்பினால், இயலாதது என்று எதுவும் இல்லை. நாமனைவரும் அமைதியை கட்டியெழுப்புபவர்களாக மாறமுடியும்' என, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செபத்தின் வல்லமையையும், அமைதியை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும், தன் டுவிட்டர் செய்தி வழியாக, மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

மேலும், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியுஸ் ஆகியோரின் பெயரில், நான்கு நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, CEICEM எனப்படும், ஆயர் பேரவையின் அங்கத்தினர்களை, இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில், Serbia, Montenegro, Macedonia மற்றும் Kosovo நாடுகளின் 9 ஆயர்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.