2017-01-26 16:00:00

சிலே நாட்டு தீ விபத்தில் இறந்தோருக்கு திருத்தந்தை அனுதாபம்


சன.26,2017. சிலே நாட்டின் காடுகளில் உருவான தீ விபத்தால் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபத்தையும், செபங்களையும் தெரிவித்து, தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தையின் சார்பில், சிலே நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், சந்தியாகோ சில்வா (Santiago Silva) அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

இறந்தோருக்கு நித்திய அமைதி அளிக்க இறைவனிடம் செபங்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தன் அருகாமையையும், அனுதாபங்களையும் திருத்தந்தை அனுப்பியுள்ளார் என்று இத்தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலே நாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான தீவிபத்து என்று சொல்லப்படும் இந்த காட்டுத் தீயினால் 180,000 ஹெக்டர் நிலப்பரப்பு கருகியுள்ளது என்றும், ஒரு தீயணைப்புப் படைவீரர் உட்பட பலர் மடிந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.