2017-01-11 16:42:00

புனித பூமியில் பன்னாட்டு ஆயர்களின் திருப்பயணம்


சன.11,2017. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் புனித பூமிக்குச் செல்லும் ஆயர்களின் குழு, இவ்வாண்டு, சனவரி 14, வருகிற சனிக்கிழமை தங்கள் பயணத்தைக் துவக்கவுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்கா பகுதிகளின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், 1990ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் இம்முயற்சி, சனிக்கிழமை, புனித பூமியின் ஜாப்பாவில் நிறைவேற்றப்படும் திருப்பலியுடன் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்து ஆயர்களைக் கொண்ட இக்குழு, சனவரி 18ம் தேதி முதல் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின்போது புனித பூமியில் பணியாற்றும் கிறிஸ்தவ சபைகளுடன் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனவரி 14ம் தேதி துவங்கும் இப்பயணத்திற்கு ஒரு முன்னேற்பாடாக, சனவரி 12, 13 ஆகிய இரு நாட்கள், இஸ்ரேல் அரசால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களை, ஆயர்களின் குழு சந்திக்க உள்ளது.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.