2017-01-07 14:25:00

பாசமுள்ள பார்வையில்... மரியன்னையின் வாரிசுகள்


திருக்காட்சிப் பெருவிழா, கிறிஸ்மஸ் விழா காலத்தை நிறைவுக்குக் கொணரும் இறுதி விழா. இத்திருவிழா காலத்தில், குழந்தை இயேசுவுக்கு நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இடம் தந்தோமா என்ற கேள்வியை, இந்த இறுதி நாளன்று எழுப்புவது நல்லது.

தன் கருவறையில் இறைமகன் என்ற கருவூலத்தைத் தாங்கிச் சென்ற இளம்பெண் மரியா, அக்கருவூலத்தை இவ்வுலகிற்கு வழங்க ஓர் இடமின்றி தவித்தார். ஏனெனில், பெத்லகேம் சிற்றூரில் அக்குழந்தையை வரவேற்க யாரும் தயாராக இல்லை.

மாடடைத் தொழுவமே அவர்களை வரவேற்றது. அன்னை மரியா, தன் மகனுக்கு, இவ்வுலகைப்பற்றி தந்த அறிமுகம், அதிர்ச்சியளிக்கிறது. மரியா, யோசேப்பு என்ற இரு மனித முகங்களைத் தவிர, அக்குழந்தை, இவ்வுலகில் நுழைந்ததும், கண்டதெல்லாம், மிருகங்களின் முகங்களே.

ஆனால், அந்த எளியத் தொழுவத்தில், இன்னும் பலருக்கு வரவேற்பளித்தனர், அன்னை மரியாவும், யோசேப்பும். குழந்தையைக் காணவந்த இடையர்கள், தொலைதூரத்திலிருந்து குழந்தையைத் தேடிவந்த ஞானிகள் என்று, அறிமுகமற்ற பலருக்கு, அன்னை மரியாவும், யோசேப்பும் வரவேற்பளித்தனர். இன்றும், அறிமுகமற்ற பலரை வரவேற்று, அடைக்கலம் அளிக்கும் அன்னையர், மரியன்னையின் வாரிசுகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.