2016-12-26 13:31:00

மறைசாட்சிய வாழ்வு குறித்த திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


டிச.26,2016. 'புனித ஸ்தேவானின் திருவிழாவான இன்று, இக்காலத்தின் மறைசாட்சிகளையும் கடந்த காலங்களின் மறைசாட்சிகளையும் நினைவுகூர்வோம். தீமைகளை நன்மையாலும், பகைமையை அன்பாலும் வெற்றிகொள்வோம்' என இத்திங்கள் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் முதல் மறைசாட்சியான யோவான் ஸ்தோவானின் திருவிழா கிறிஸ்து பிறப்புக்கு அடுத்த நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தின் மறைசாட்சிகள் குறித்தும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என அதில் விண்ணப்பித்துள்ளார்.

மேலும், கிறிஸ்து பிறப்பு விழாவன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, 'கிறிஸ்து நமக்காகப் பிறந்துள்ளார், நம் விடுதலையின் நாளைக் கொண்டாடுவோம்' என்பதாக இருந்தது.

அதேவண்ணம், "பெத்லகேம் இடையர்களைப் போல, இறைவனின் மகனான குழந்தை இயேசுவை, வியப்பு நிறைந்த கண்களால் நாமும் காண்போமாக" என்ற சொற்கள் டிசம்பர் 24ம் தேதி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.