2016-12-23 15:19:00

திருவருகைக்காலச் சிந்தனை : தேடிவரும் தேவன்


நாம் அன்பு செய்பவர்களை தேடிச்சென்று சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், உறவாடுவதிலும், நம் உள்ளம் பெரு மகிழ்ச்சிக்கொள்கின்றது.

உண்மையிலேயே நாம் அன்பு செய்பவர்களை நாம் தேடிச்செல்கின்றோம்.

நாம் நேசிப்பவர்களுக்காக எந்த ஒரு தியாகமும் செய்ய தயாராக இருக்கின்றோம்.

நமது மனம் விரும்புவோரின் மனமகிழ்ச்சியை நாம் விரும்புகின்றோம்.

அதேபோன்று இறைவன் நம்மைத் தேடி வருகின்றார்.

ஆம், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது.

தனது அளவுகடந்த அன்பினால் நம்மை அரவணைக்க வருகின்றார்.

நமது நம்பிக்கையை வலுப்படுத்தி, நமக்கு நிறைவான மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றார்.

நாம் சுவைக்கும் அந்த இறையன்பை, பிறரோடு பகிர்ந்து கொள்வோம்.

பெற்றுக்கொள்ளும் இறைஇரக்கத்தை, பிறருக்கும் காட்டுவோம்.

வளர்த்துக்கொள்ளும் இறைநம்பிக்கையை, பிறரிலும் விதைப்போம்.

அனுபவிக்கும் இறைமகிழ்ச்சியை, பிறர் வாழ்விலும் ஏற்படுத்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.