திருமுழுக்கு யோவான் பிறந்த வேளையில், எலிசபெத்தின் சுற்றாரும் உறவினர்களும் அவரோடு சேர்ந்து மகிழ்வதைப் பார்க்கும்பொழுது, உறவினால் வருகின்ற மகிழ்வு நமக்குப் புரிகின்றது.
உண்மைதான், உறவுகள் இணையும்பொழுது உற்சாகம் பிறக்கின்றது;
உறவுகள் வலுப்பெறும்பொழுது, உன்னத ஆற்றல் மனதில் உதயமாகிறது; உறவுகள் மதிப்புப் பெறும்பொழுது, உடமைகள் மதிப்பு இழக்கின்றன; உறவுகள் கட்டப்படும்பொழுது, உணர்வுகள் மதிக்கப்படுகின்றன;
உறவுகள் வளர்க்கப்படும்பொழுது, உள்ளார்ந்த மகிழ்ச்சி பெருகுகின்றது.
ஆம், அனைவரும் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒருமனப்பாங்கோடு இருக்கும்பொழுது, அங்கு பேதமை இல்லை, ஏற்றத்தாழ்வு காணப்படுவதில்லை, கசப்புணர்வு தோன்றுவதில்லை, பகைமை நெருங்குவதில்லை.
எனவே, ஏதோ ஒரு சிறிய வார்த்தைக்காக முறித்துக்கொண்ட இரத்த உறவுகளைப் புதுப்பிப்போம்;
ஏதோ ஒரு சிறிய செயலுக்காக ஒதுக்கிய சுற்றத்தாரோடு ஓன்று சேர்வோம். ஏதோ ஒரு சிறிய மனக்கசப்பினால் விலக்கிய நண்பர்களை அணைத்துக்கொள்வோம்;
தவறான கண்ணோட்டத்தினால் பகைவர்கள் என்று நினைத்தவர்களை நண்பர்களாக்கிக்கொள்வோம்;
தவறான புரிதல்களால் எதிரிகள் என்று பார்த்தவர்களை தோழர்களாய் ஆக்கிக்கொள்வோம். மனதில் இருக்கும் வடுக்களை மாற்றுவோம். உறவின் மகிழ்ச்சியைப் பருகுவோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |