2016-12-22 16:02:00

RAI 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்து


டிச.22,2016. "மனிதரின் வலுவற்ற நிலை என்ற சுமையை, தன் மீது ஏற்றுக்கொண்ட இயேசுவின் பிறந்தநாள் நெருங்கிவருகிறது" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

அதேவண்ணம், இப்புதனன்று திருத்தந்தை பதிவுசெய்த டுவிட்டர் செய்தியில், "இரக்கம் மகிழ்வைத் தருகிறது, ஏனெனில், புதிய வாழ்வு என்ற நம்பிக்கையை நோக்கி நம் இதயம் திறக்கப்படுகின்றது" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.

மேலும், டிசம்பர் 22, இவ்வியாழனன்று, தங்கள் 30ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் RAI 1 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருக்கும், அங்கு பணியாற்றுவோர் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைப்பேசி வழியே, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் தன் 80வது பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டி RAI 1 தொலைக்காட்சி நிறுவனம் உருவாக்கியிருந்த ஒரு காணொளித் தொகுப்பை, அந்நிறுவனத்தின் தலைவர் திருத்தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார்.

இருவரும் கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துக்களைப் பகிர்ந்தவண்ணம், இந்தத் தொலைபேசி அழைப்பு நிறைவுபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.