2016-12-16 16:32:00

திருவருகைக்காலச் சிந்தனை : கிறிஸ்து பிறப்பு - அன்பின் செய்தி


உலகத்தின் மீதுள்ள அன்பை புதுப்பித்து, உறுதிப்படுத்த, நம்மோடு உறவாட, இறைவன் தந்த அற்புத வாய்ப்பு, இந்த கிறிஸ்து பிறப்பு. இந்த அன்பின் அடையாளத்தை, நாம் வரவேற்கும் இந்நாள்களில், வெறும், திருவருகைக் கால மெழுகுதிரிகளை ஏற்றி வைப்பதோடு நிறுத்திவிடாமல், நமது மனங்களில் அன்புத் திரிகளை ஏற்றிவைத்து பிறர் வாழ்வில் ஒளியேற்றுவோம். நம் அன்பு, சொல்லிலும், செயலிலும் பகிரப்படும்போது, கிறிஸ்து பிறப்பு அர்த்தப்படுகிறது. நாம் செய்யும் ஒவ்வொரு அன்புப் பகிர்வுக்கும், நம் வீடுகளில் ஒரு விதை விதைப்போம். நமது மனம் போல, அவைகளும்  மாற்றம் பெற்று வளரும்போது, நமது இல்லக் குடில்களில், புல் தரைகளை உருவாக்குவோம். நமது இல்லக் குடில்களில், பாலன் பிறக்க, நம் அன்புச்செயல்கள் அர்த்தமுள்ளதாகட்டும்.

நமது அன்பு பகிர்வு ... புல்தரையின் விஸ்தரிப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.