கிறிஸ்து பிறப்பு, ஒரு குடும்பத்தின் கதை. சாதாரண மக்களின் வாழ்க்கை கதை. திருமணம் எனும் பந்தத்தின் நல்ல எடுத்துக்காட்டு. தயங்கிய யோசேப்பு, தளராத மனம் கொண்ட அன்னை மரி, இவர்களின் குடும்ப சவால்களில் ஒருமித்த பங்கெடுப்புதான், இந்த கிறிஸ்து பிறப்பு. இறைவனால் இணைக்கப்பெற்ற இந்த குடும்பம், இறை திருவுளத்தை நிறைவேற்றி, நம் குடும்பங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது. பேறுகால பெண்ணின் சவால்களும், மனைவியை புரிந்து கொள்ளும் யோசேப்பின் தியாக உள்ளமும், திருமண பந்தத்தில் இணைகிற இரு பாலாருக்கும் முன்னோடியாய் அமைகின்றன. தலை கிறிஸ்துமஸ், வெறும் சடங்காக மட்டும் இருந்துவிடாமல், பொறுப்புணர்வு கொண்ட தந்தை, தாயாக மாற, இந்த கிறிஸ்து பிறப்பு நம்மை அழைக்கின்றது. நம் குடும்பத்தில், பாலன் பிறக்க, நமது மனம் தயாரா?
All the contents on this site are copyrighted ©. |