2016-12-12 15:01:00

திருவருகைக்காலச் சிந்தனை : கிறிஸ்து பிறப்பு-நம்பிக்கை செய்தி


கிறிஸ்து பிறப்பு நமக்குக் கற்றுத்தரும் பாடம், நம்பிக்கை. நெடுந்தொலைவு பயணம், கடுங்குளிர் காலம், சவால் நிறைந்த நேரம், ஏழ்மை கோலம், தளராத மனம், வழிகாட்டும் நம்பிக்கை நட்சத்திரம் - இவை, கிறிஸ்து பிறப்பு நிகழ்வின் சுருக்கங்கள் எனினும், அவையே, நம்பிக்கையின் விதைகள்; நம் வாழ்வின் படிநிலைகளை, படம்போட்டுக் காட்டுவன.

வாழ்க்கைப் போராட்டங்கள் நம்மைச் சோர்வடைய செய்யும் வேளைகளில், தளராத மனம் கொண்டு, இலக்கை நோக்கி நடந்தால், நாம் புது பிறப்பைக் கண்டடைவோம் என்ற நேர்மறை உந்து விசையை, இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. இந்த மீட்பின் பிறப்பு, நம்மிடையும் நடந்தேற, நம் வாழ்வும் விடியலை நோக்கி பயணிக்க, நம்மையே தயாரிப்போம். ஏனெனில், சவால்களின் மத்தியில்தான், சாதனைகள் பிறக்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.