2016-12-07 17:13:00

ஈராக் இளையோரின் நினிவே சமவெளி பாதுகாப்பு படை


டிச.07,2016. ஈராக் நாட்டில் வாழும் கிறிஸ்தவ இளையோரின் உதவியோடு, நினிவே சமவெளி பாதுகாப்பு படையொன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஈராக் நாட்டின் மோசூல் நகரையும், நினிவே சமவெளிப் பகுதியையும் அடிப்படைவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை செய்து வரும் ஈராக்கிய படை, அப்பகுதிகளைக் காத்து, அங்கு மீண்டும் மக்களை குடியமர்த்தும் பணியில் ஈடுபட, கிறிஸ்தவ இளையோரை அழைத்துள்ளது.

அசீரிய, சிரிய கிறிஸ்தவர்கள், கல்தேய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து பிரிவிலும் உள்ள கிறிஸ்தவ இளையோர், இந்தப் பணிக்கென தன்னார்வத் தொண்டர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இப்பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், மீண்டும் அங்கு குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது, இவ்விளையோரின் முதல் கடமை என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.