டிச.,05,2016. ஆப்கானிஸ்தானில், நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்களின் எண்ணிக்கை, 2014ம் ஆண்டிற்கு பின், இரண்டு மடங்காகியுள்ளதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக இருந்த மக்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரமாக இருந்தது, தற்போது, அதாவது, நவம்பர் மாதம் 30ம் தேதி வரை உள்ள கணக்கெடுப்பின்படி, 5 இலட்சத்து 15 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளதாக, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நா. நிறுவனம் UNOCHA அறிவித்துள்ளது.
இதனுடன், இவ்வருடத்தில் மட்டும், 6 இலட்சம் ஆப்கான் அகதிகள், பாகிஸ்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |