2016-12-02 14:43:00

திருவருகைக்காலச் சிந்தனை : அன்பு வாழ்வின் வழியே நற்செய்தி


உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் எனும் இன்றைய அழைப்பு, இன்றைய புனிதர் சவேரியாரின் வாழ்வோடு ஒட்டி அமைந்து, நம்மையும் பதிலுறுக்க அழைக்கின்றது. கிறிஸ்தவ வாழ்வின் சாராம்சத்தை ஒரு வரியில் விளக்கிவிடும் இவ்வழைப்பு, புனித பவுல் கூறுவது போல, மன நிறைவை, நமக்குக் கைம்மாறாகத் தருகிறது.

சமய வன்முறைகள் பெருகி வரும் இக்காலத்தில், நற்செய்தி அறிவிப்பு, ஒரு சவால்தான். இறை அன்பை உணர முடியாத மக்களிடையே அதன் தூதர்களாக உருமாறுவோம். சவேரியாரின் பாதம் கண்ட நமது நாடு, சமய நல்லிணக்கத்தில் வளரட்டும். எல்லாரும் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் என்ற நற்செய்தியை, நமது அன்பு வாழ்வின் வழியே, அடுத்தவர் உணரட்டும்.

உலக மாற்று திறனாளிகள் நாளில், உலகை மாற்றும் திறனாளிகளாக உருமாறுவோம்! இறையன்பு இவ்வுலகை ஆளட்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.