2016-11-16 15:24:00

சிறார் உரிமைகள் பாதுகாக்கப்பட திருத்தந்தை அழைப்பு


நவ.16,2016. அனைத்துக் குடும்பங்களும், நிறுவனங்களும், சிறாரின் நலன் பாதுகாக்கப்படுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப் பின்னர், நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று, உலக சிறார் உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டு, இவ்வாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

சிறார் உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் வழியாக, அடிமைமுறை, ஆயுதக் குழுக்கள் மற்றும், தவறாக நடத்தப்படுவதிலிருந்து சிறார் காப்பாற்றப்படுவார்கள் எனவும் கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு சிறாரின் பள்ளி செல்வதற்கான உரிமை உறுதிசெய்யப்படுவதில், விழிப்பாயிருக்கவும், சிறார், அமைதியான சூழலில் வளரவும் அனைத்துலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதனால், சிறார், வருங்காலத்தை நம்பிக்கையோடும் நோக்குவார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.