2016-10-31 15:37:00

வெராப்பொளி உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்


அக்.31,2016. இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள வெராப்பொளியின் பேராயராக, ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வெராப்பொளி உயர் மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர், பிரான்சிஸ் கல்லரக்கல் அவர்கள் பணி ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தற்போது திருத்தந்தையால் புதிய பேராயராக அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள், 2011ம் ஆண்டு முதல் குடியேற்றதாரர் மற்றும் பயணிகள் திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றிவந்தவர்.

புதியப் பேராயர் களத்திப்பரம்பில் அவர்கள், 1952ம் ஆண்டு வடுதலா எனுமிடத்தில் பிறந்து, வெராப்பொளி உயர் மறைமாவட்டத்தில் 1978ம் ஆண்டு அருள்பணியாளராக திருப்பொழிவுச் செய்யப்பட்டார். பின்னர், 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கேரளாவின் கோழிக்கோடு ஆயராகப் பணியாற்றியுள்ளார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.