2016-10-28 15:07:00

இது இரக்கத்தின் காலம்: அமைதியில் ஆற்றுபவை வெற்றியடைவது உறுதி


ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அவர் அந்த இடத்தை சுற்றி பல தடவை தேடிப்பார்த்தும், அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, "என் கைக்கடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடித் தருகிறேன்" என்று கூறிவிட்டு, மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறிது நேரத்தில் கைக்கடிகாரத்துடன் வெளியே வந்தான். அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார். "நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து, எந்த திசையில் இருந்து ‘டிக் டிக்’ சத்தம் வருகிறது என்று காதுகளை கூர்மையாக்கி கேட்டேன்.. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான்.

அமைதியான மனநிலையில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அது வெற்றிகரமாக முடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.