2016-10-17 16:27:00

திருத்தந்தை : இறைவனுடன் நட்பை வளர்ப்பதில் தடையில்லை


அக்.17,2016. 'இறைவனுடன் நட்பை வளர்ப்பதிலிருந்து உங்களை எதுவும் தடைசெய்யாதிருக்கட்டும்' என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுச் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்றும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'புனிதத்தை நோக்கிய பாதையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்வோம்' என அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இத்திங்களன்று சுலோவேனிய குடியரசுத் தலைவர் Borut Pahor அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை.

மேலும், 2017ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் ஜெனோவா நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.