2016-10-14 16:45:00

இறைவன் நம் நன்மையையே எப்போதும் விரும்புகிறார்


அக்.14,2016. “நம் நன்மையையே எப்போதும் விரும்பும் இறைவன், நாம் பாவம் செய்யும்போதுகூட அதை நிறுத்துவதில்லை” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், “புலம் பெயர்ந்துள்ள சிறார்க்கு, நல்ல சூழலில் பாதுகாப்பான குடும்பத்தைக் கொண்டிருப்பதற்கு உரிமை உள்ளது; கிறிஸ்தவ சமூகத்தில் யாரும் அந்நியர் அல்ல; அனைத்துப் புலம் பெயர்ந்துள்ள சிறாரை, நாசரேத்து திருக்குடும்பத்தின் பாதுகாவலில் அர்ப்பணிக்கின்றேன்; மிகச் சிறிய மற்றும் மிகவும் வலுவற்ற மக்களுக்கு உதவும்போது நாம் நற்செய்தியை வாழ்கிறோம்” என்ற சொற்களை, திருத்தந்தை, இவ்வியாழனன்று, தனது டுவிட்டரில் வெளியிட்டார்.

அடுத்த ஆண்டு சனவரியில் கடைப்பிடிக்கப்படும், அனைத்துலக புலம் பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் நாளுக்கென, திருத்தந்தையின் செய்தி இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது. அச்செய்தியையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டரிலும், இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.