2016-10-14 16:47:00

இயேசு சபையின் 31வது உலகத் தலைவராக, அருள்பணி சோசா


அக்.13,2016. உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் 36வது பொதுப் பேரவையின் உறுப்பினர்கள், அக்டோபர் 14, இவ்வெள்ளியன்று, தங்கள் சபையின் 31வது உலகத் தலைவராக, அருள்பணி அர்த்தூரோ சோசா அபஸ்கால் (Arturo Sosa Abascal) அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

1948ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி, வெனிசுவேலா நாட்டின் கராகாஸ் (Caracas) நகரில் பிறந்த அருள்பணி சோசா அவர்கள், 1966ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்து, 1977ம் ஆண்டு, குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அரசியல் இயலில் முனைவர் பட்டம் பெற்ற அருள்பணி சோசா அவர்கள், 1996ம் ஆண்டு முதல் வெனிசுவேலா இயேசு சபை மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர். உரோம் நகரில் பணியாற்றும் இயேசு சபையினருக்கு, 2014ம் ஆண்டு முதல், தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஸ்பானிய மொழியை தன் தாய் மொழியாகக் கொண்டுள்ள, 67 வயது நிறைந்த அருள்பணி சோசா அவர்கள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.