2016-10-14 15:05:00

இது இரக்கத்தின் காலம் : திரும்பத் திரும்ப அழ வைக்கும் துயரம்


ஞானி ஒருவர் கோயில் ஒன்றில் போதித்துக் கொண்டிருந்தார். இடையே நகைச்சுவை ஒன்றைச் சொன்னார். கூட்டத்தில் அனைவரும் விழுந்து விழுந்துச் சிரித்தனர். அதே நகைச்சுவையை மறுபடியும் சொன்னார். இம்முறை கொஞ்சம் பேர் மட்டும் சிரித்தனர். அதே நகைச்சுவையை இடையிடையே சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் யாருமே சிரிக்காமல் அமைதியாய்

இருந்தனர். இதைக்கண்ட ஞானி, ‘ஒரு நகைச்சுவையை, திரும்பத் திரும்ப கேட்கும்போது சிரிக்க முடியாத உங்களால், என்றோ நடந்து முடிந்த துயர சம்பவங்களை மட்டும் நினைத்து, எப்படி திரும்பத் திரும்ப அழ முடிகிறது? ஒரே விடயத்திற்காக எப்படிப் பல காலம் பகையும் வன்மமும் கொள்ள முடிகிறது?’ என்று கேட்டார்.

கூட்டத்தினர் சிந்திக்கத் தொடங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.