2016-10-11 16:31:00

திருத்தந்தையிடம் கவர்ந்திழுக்கும் ஆளுமை


அக்.11,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடியது, மனதுக்கு மிகவும் இதமாகவும், சக்தியளிப்பதாகவும் இருந்தது என்று, ஜெர்மன் நாட்டு அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெர்மனியின் Schleswig-Holstein மாநில முதலமைச்சர் Torsten Albig அவர்கள், இத்திங்களன்று, திருத்தந்தையை, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசியது குறித்து அறிக்கை வெளியிட்ட அம்மாநில அரசு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கவர்ந்திழுக்கும் ஆளுமையைக் கொண்டிருக்கிறார் என்று, Albig அவர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் இனப் பாகுபாடு மற்றும் அந்நியர் மீதான வெறுப்பு குறித்தும், திருத்தந்தையின் Laudato si’ திருமடல் மற்றும், சுற்றுச்சூழல் விவகாரங்கள் குறித்தும், இவ்விருவரும் உரையாடியதாக, அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.