2016-09-27 16:40:00

உலக சுற்றுலா தினம் : “எல்லாருக்கும் சுற்றுலா”


செப்.27,2016. ஏறக்குறைய 120 கோடிப் பேர் ஒவ்வோர் ஆண்டும், தங்கள் நாடுகளைவிட்டு, வேறு நாடுகளுக்குச் சுற்றுலா செல்கின்றனர் என்றும், சுற்றுலா, சக்திவாய்ந்த பொருளாதாரத் துறையாக மாறி வருகின்றது என்றும் கூறினார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றுலா தினத்திற்கு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை முன்னேற்றும் சக்தியாகவும், வளமைக்கும், அமைதிக்கும் உதவுவதாகவும் சுற்றுலா அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஓய்வெடுக்கவும், சுற்றுலா செல்லவும் ஒவ்வொரு மனிதருக்கும் சம உரிமை உள்ளது என்றும், உலகில், மாற்றுத்திறனோடு வாழும் நூறு கோடிப் பேர், பயணம் செய்வதற்குரிய போதிய வசதிகள் இன்னும் இல்லை என்றும் கூறியுள்ளார், பான் கி மூன்.

எல்லா மக்களும் பயணம் செய்வதற்குத் தடையாக அமைந்திருக்கின்ற, அனைத்தும் நீக்கப்படுவதற்கு, கொள்கை அமைப்பாளர்களும், நிறுவனங்களும் ஆவன செய்யுமாறும் கேட்டுள்ளார், பான் கி மூன்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.