செப்.26,2016. மெக்சிகோ நாட்டில் கடந்த வாரத்தில் கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளர் Jose Alfredo lopez Guillen அவர்களின் சடலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் Veracruz மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு, இம்மாதம் 19ம் தேதி இரு அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது அருள்பணியாளரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சில காலத்திற்கு முன்னர் மெக்சிகோவில் கடத்தப்பட்டுள்ள மேலும் இரு அருள்பணியாளர்கள் குறித்து எவ்விதச் செய்தியும் இல்லை.
தற்போது கொலையுண்ட நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 53 வயது நிரம்பிய அருள்பணியாளர் Alfredo lopez Guillen அவர்கள், Janamuato எனுமிடத்தின் தூய மூவொரு கடவுள் ஆலயத்தின் பங்கு குருவாக செயல்பட்டு வந்தவர்.
2012ம் ஆண்டு டிசம்பர் முதல், இதுவரை மெக்சிகோவில் 15 அருள்பணியாளர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |