2016-09-26 17:04:00

சகோதரருக்கு ஆற்றும் உதவியில் இறைவனின் முகம் காண்போம்


செப்.26,2016.  நம் சகோதரருக்குச் செய்யும் உதவியில் இறைவனைக் காண முடியும் என்ற கருத்தை மையமாக வைத்து தன் டுவிட்டர் செய்தியை இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘ஒருவராலும் காணமுடியாத இறைவனின் முகத்தை நாம் உதவிச் செய்யும் சகோதரரில் கண்டுகொள்ள முடியும்' என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

இதற்கிடையே, இத்திங்களன்று காலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசுத்தலைவர் Joseph Kabila Kabange அவர்கள், அரசுக் குழுவினருடன் திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் Kabila Kabange அவர்கள், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.