2016-09-19 17:48:00

பெர்லினில் வாழ்வுக்கு ஆதரவான மாபெரும் பேரணி


செப்.19,2016. 'வாழத் தகுதியற்ற குழந்தை என்று எக்குழந்தையும் இல்லை' என்ற தலைப்புடன் ஜெர்மனியின் பெர்லின் நகரில், வாழ்வுக்கான அமைதி ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சனிக்கிழமையன்று 7,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்வூர்வலத்தில், கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை மனித உயிர் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து நடத்திய வாழ்வுக்கான இந்த ஊர்வலத்தில், ஐந்து ஆயர்களும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : EWTN/CNA/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.