2016-09-19 16:52:00

பணிவிடைப் புரிவதன் வழியாகவே மறைப்பணி


செப்.19,2016. ‘மறைப்பணி என்பது பணிவிடை புரிவதன் வழியாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இயேசுவின் சீடனாயிருப்பதற்குரிய ஒரே வழி அதுவே’ என இத்திங்களன்று தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதே நாளில், அர்ஜென்டினாவின் முன்னாள் அரசுத் தலைவர் கார்லோஸ் சவுல் மெனெம் (Carlos Saul Menem) அவர்களையும், அவரின் குடும்பத்தினரையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின், திருப்பீடத்திற்கான பிரிட்டனின் புதிய தூதர் சாலி ஜேன் ஆக்ஸ்வொர்த் (Sally Jane Axworth) அவர்களைச் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ் எனப்படும் நியமனப் பத்திரத்தை பெற்றுக் கொண்டார்.

மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று காலை, உலக அமைதிக்கான அசிசி நகர் செப நாளில் கலந்துகொள்ள ஒரு நாள் திருப்பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.